Sunday, March 5, 2017

Top 12 Illaiyaraja's Compositions

The Maestro Who Has Really Give Us Some Fresh Melodies not only throughout his Reign But also Now.
The Musical Genius Brought A New Pathway For Music Of Tamil Cinema.

Here 12 Best Compositions of The Maestro is Stated And Is Completely Ranked By Personal Opinions of Music Critic Abishek

1. Machana Pathingala, from Annakili

In 1975,a young man who had come to Chennai seeking his fortune was given the opportunity to score the music for Annakili. It marked the arrival of a phenomenon on the South Indian film scene. For the songs in this sensitive, black & white film about unrequited love Ilayaraja combined folk rhythms with the film music techniques of the times. This vibrant song in the sweet voice of Janaki will always remain a favourite with those who listened to the radio in the late ‘70s.

2. Metti Oli Kaatrodu, from Metti

The ‘80s were marked by dozens of melodies of this sort. Ilayaraja himself sang this song from Metti,by Mahendran, with Janaki providing the humming. More than a few fans of this song say it transports them to another plane. Sensuous lyrics add to its appeal.

3. Kannil Enna Kaarkaalam, from Un Kannil Neer Vazhindhal

This evergreen song from the ’80s brought together the very best talent of the time: the golden voices of SP Balasubramaniam and Janaki, lyrics by Vairamuthu and, of course, the maestro’s music. The song featured a young Rajinikanth and the very lovely Madhavi.

4. Nee Oru Kadhal Sangeetham,
from Nayagan

In this beautifully shot song, featuring Kamal Haasan and Saranya, from Mani Ratnam’s Nayagan, Ilayaraja displayed his flairfor working with classical ragas. This one in Shyam Kalyani, sung by Chitra and Mano, makes it to the top 12 of most people’s favourite love songs.

5. Sundari, from Thalapathy

This song is from Thalapathy, the last film on which Mani Ratnam and Ilayaraja worked together. Set to the maestro’s favourite Kalyani raga, it combines soft melody, rousing scores and superb lyrics. The video features Rajinikanth and a ravishing Shobana.

6. Kalyana Then Nila, from Mounam Sammadham

This song, featuring Mammootty and Amala, is another of the maestro’s super-hit romantic melodies. With its classical overtones and beautifully constructed wordplay, it creates a mellow mood.

7. Nee Paartha Parvaikkoru Nandri, from Hey Ram

Here’s another gentle, haunting melody from the master composer. The song, from Kamal Haasan’s period film, was sung by Asha Bhonsle and Hariharan. Its appeal spans generations as well.

8. Uravugal Thodarkathai, from Aval Appadithan

It’s the magic of Ilayaraja that the songs he composed 30 years and more ago still continue to delight listeners. This one,in the rich voice of K J Yesudas, is from the 1978 black & white film Aval Appadithan. The lyrics do justice to the maestro’s music.

9. Ilaya Nila Pozhigirathe, Payanangal Mudivathillai

If Ilayaraja reigned over the ‘80s it was because of songs such as this one. This fast-paced number made extensive use of acoustic guitar. The guitar pieces are the highlight of the interludes.

10. Enn Vaanile, from Johnny

Another gem from the ‘80s, this song is from the Rajinikanth-Sridevi starrer, Johnny. Ilayaraja chose Jency to render the song.

11. Enna Sattham Indha Neram, from Punnagai Mannan

In the film, this song is a prelude to a tragedy when the young lovers decide to commit suicide. S P Balasubramaniam’s voice and the maestro’s music combine to make a super-hit number.

12. Poongkathave Thaazh Thiravai, from Nizhalgal

When it comes to classical tunes, Ilayaraja isin supreme control. This song from Nizhalgal is made wondrous with its haunting violin pieces

Tuesday, February 28, 2017

History of Vairamuthu poet

ஒவ்வொரு தமிழ் ரசிகனுக்கும் பாடல்கள் என்றாலோ, கவிதைகள் என்றாலோ, ஹைக்கூ என்றாலோ நினைவுக்கு வருபவர் ‘கவியரசு வைரமுத்து’ அவர்களே. தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற பாடலாசிரியராகவும், கவிஞராகவும் திகழும் அவர்,  சிறந்த பாடலாசிரியருக்காக ‘ஆறு முறை தேசிய விருதும்’, ‘கலைமாமணி விருதும்’, ‘பத்மஸ்ரீ விருதும்’ பெற்ற இந்திய தமிழ்க் கவிஞர். ‘கவியரசு’ என்றும், ‘கவிப்பேரரசு’ என்றும், ‘காப்பியப்பேரறிஞர்’ என்றும், ‘காப்பியசாம்ராட்’ என்றும் பட்டங்கள் பெற்ற வைரமுத்து அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: ஜூலை 131953

பிறந்த இடம்: வடுகபட்டிதேனி மாவட்டம், தமிழ்நாடுஇந்தியா

தொழில்: கவிஞர், பாடலாசிரியர்

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

வைரமுத்து அவர்கள், தமிழ்நாட்டில் உள்ள தேனி மாவட்டத்திலிருக்கும் வடுகப்பட்டியில் (பெரியகுளம் அருகில் உள்ளது) ஜூலை 13 ஆம் தேதி, 1953 ஆம் ஆண்டில் ராமசாமி தேவருக்கும், அங்கம்மாளுக்கும் மகனாக ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.

ஆரம்பகால வாழ்க்கையும், கல்வியும்

தன்னுடைய இளமைப் பருவத்தில் அண்ணாவின் இனிமையான தமிழ் நடையாலும், பெரியாரின் சிந்தனைகளாலும், கருணாநிதியின் இலக்கியத் தமிழாலும் கவரப்பட்டு, பாரதியார், பாரதிதாசன் மற்றும் கண்ணதாசன் அவர்களின் கவிதை நடையால் பெரிதும் ஈர்க்கப்பட்டதால், மேலும் தனது கிராமத்தின் சுற்றுப்புறச்சூழலும் அவரைத் தனது பன்னிரெண்டாவது வயதிலேயே கவிதை எழுத ஊக்குவித்தது. திருவள்ளுவரின் திருக்குறளால் கவரப்பட்ட அவர், தனது பதினான்காவது வயதிலேயே, தமிழ் செய்யுளின் யாப்பின் சொல் இலக்கண விதிகளைக் கொண்டு கவிதைகள் எழுதத் தொடங்கினார். பள்ளிப்படிப்பிலும் சிறந்து விளங்கிய அவர், தனது உயர்கல்விப் படிப்பில் மதுரை மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று, அதற்காக வெள்ளிப்பதக்கமும் வென்றார். பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், தமிழில் இளங்கலைப் பட்டம் (பி.ஏ) பெறுவதற்காக, அவர் சென்னையிலுள்ள பச்சையப்பா கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரி நாட்களில், அவர் பல போட்டிகளில் கலந்து கொண்டு, சிறந்த பேச்சாளர் மற்றும் கவிஞருக்காக 20க்கும் மேற்பட்ட பரிசுகளை வென்றார். கல்லூரியின் இரண்டாவது ஆண்டில், அவருக்கு பத்தொன்பது வயதிருக்கும் போது, ‘வைகறை மேகங்கள்’ என்ற முதல் பாடல் திரட்டை வெளியிட்டார். அவரது இந்தப் படைப்பானது, சென்னையிலுள்ள பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியின் பாடத்திட்டத்தில் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. அவரது படைப்பு பாடத்திட்டத்தில் வந்ததால், ஒரு மாணவக் கவிஞராக அவர் முதல் நிலையில் தேர்ச்சிப் பெற்றார். பின்னர், முதுகலைத் (எம்.ஏ) தேர்வில் தங்கப்பதக்கம் பெற்றார். 1979ல், அவரது இரண்டாவது படைப்பான ‘திருத்தி எழுதிய தீர்ப்புகள்’ என்ற படைப்பை வெளியிட்டார்.



வைரமுத்துவின் படைப்புகள்

தமிழ்மொழியின் மீது அளவற்றப் பற்றுக் கொண்ட அவர், திரைப்படங்களோடு நிறுத்திக்கொள்ளாமல், பல்வேறு நாவல்கள், கவிதைத் தொகுப்புகள், நூல்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார். அவரது படைப்புகளில் சில

நாவல்கள் – ‘வில்லோடு வா நிலவே’, ‘தண்ணீர் தேசம்’, ‘வானம் தொட்டுவிடும்’, ‘தூரம்தான்’, ‘கருவாச்சி காவியம்’, ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’, மற்றும் ‘மூன்றாம் உலகப் போர்’

கவிப் பேரரசு அவர்களின் உலகப் புகழ்பெற்ற கவிதைத் தொகுப்புகள் – ‘வைகறை மேகங்கள்’, ‘சிகரங்களை நோக்கி’, ‘திருத்தி எழுதிய தீர்ப்புகள்’, ‘தமிழுக்கு நிறமுண்டு’, ‘இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல’, ‘இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்’, ‘சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்’, ‘இதனால் சகலமானவர்களுக்கும், ‘இதுவரை நான்’, ‘கொஞ்சம் தேனீர் நிறைய வானம்’, ‘பெய்யென பெய்யும் ம‌ழை’, ‘நேற்று போட்ட கோலம்’, ‘’ஒரு போர்களமும் இரண்டு பூக்களும்’, மற்றும் ‘ஒரு மெளனத்தின் சப்தங்கள்’.

நூல்கள் – ‘கள்ளிகாட்டு இதிகாசம்’, ‘இதனால் சகலமானவர்களுக்கும்’, ‘இந்த பூக்கள்  விற்பனைக்கு அல்ல’, ‘இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள்’, ‘ஒரு போர்க்களமும்  இரண்டு பூக்களும்’, ‘காவி நிறத்தில் ஒரு காதல்’, ‘என் பழைய பனை ஓலைகள்’, ‘இன்னொரு தேசிய கீதம்’, ‘வைகறை மேகங்கள்’, ‘ரத்ததானம்’, ‘சிற்பியே உன்னை  செதுக்குகிறேன்’, ‘எல்லா நதியுளும் என் ஓடம்’, ‘திருத்தி எழுதிய தீர்ப்புகள்’, ‘கவிராஜன் கதை’, ‘வானம் தொட்டுவிடும் தூரம்தான்’, ‘தண்ணீர் தேசம்’, ‘நேற்று போட்ட கோலம்’, ‘தமிழுக்கு நிறம் உண்டு’, ‘மீண்டும் என் தொட்டிலுக்கு’, ‘கொடிமரத்தின் வேர்கள்’, ‘வில்லோடு வா நிலவே’, ‘என் ஜன்னலின் வழியே’, ‘ஒரு மௌனத்தின் சப்தங்கள்’, ‘கல்வெட்டுகள்’, ‘கேள்விகளால் ஒரு வேள்வி’, ‘கொஞ்சம் தேநீர் நிறைய வானம்’, ‘வடுகபட்டி முதல் வல்கா வரை’, ‘பெய்யென பெய்யும் மழை’, ‘இதுவரை நான்’, ‘ஒரு கிராமத்து பறவையும் சில கடல்களும்’, ‘பாற்கடல்’ மற்றும் ‘கருவாச்சி காவியம்’.

விருதுகளும், அங்கீகாரங்களும்

1981ல் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்திற்காகவும், 1995ல் ‘கருத்தம்மா’ படத்திற்காகவும், 1996ல் ‘முத்து’ மற்றும் ‘பம்பாய்’ படங்களுக்காகவும், 2000ல் ‘சங்கமம்’ படத்திற்காகவும், 2006ல் ‘அந்நியன்’ படத்திற்காகவும், 2008ல் ‘பெரியார்’ படத்திற்காகவும் தமிழ்நாட்டின் மாநில விருதைப் பெற்றார்.

1986ல் ‘கலைமாமணி விருது’ வழங்கப்பட்டது.

2003 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்மஸ்ரீ விருது’ வழங்கப்பட்டது.

1986 ல் ‘முதல் மரியாதை’ (1985) படத்திலிருந்து வரும் ‘பூங்காற்று திரும்புமா’ என்ற பாடலுக்காகவும், 1993ல் ‘ரோஜா’ (1993) படத்திலிருந்து வரும் ‘சின்ன சின்ன ஆசை’ என்ற பாடலுக்காகவும், 1995ல், ‘கருத்தம்மா’ (1995) படத்திலிருந்து வரும் ‘போறாளே பொன்னுத்தாயி’ என்ற பாடலுக்காகவும், ‘பவித்ரா’ படத்திலிருந்து வரும் ‘உயிரும் நீயே’ என்ற பாடலுக்காகவும், 2000ல், ‘சங்கமம்’ (2000) படத்திலிருந்து வரும் ‘முதல் முறையே கில்லி பார்த்தேன்’ என்ற பாடலுக்காகவும், 2003ல், ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ (2003) படத்திலிருந்து வரும் ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ என்ற பாடலுக்காகவும், 2011ல், ‘தென்மேற்குப் பருவக்காற்று’ (2011) படத்திலிருந்து வரும் ‘கள்ளிக்காட்டில் பிறந்த தாயே’ என்ற பாடலுக்காகவும் ஆறு முறை தேசிய விருதுகளை வென்றார்.

 காலவரிசை

1953: தேனி மாவட்டத்திலிருக்கும் வடுகப்பட்டியில் ஜூலை 13 ஆம் தேதி, 1953 ஆம் ஆண்டில் பிறந்தார்.1979: அவரது இரண்டாவது படைப்பான ‘திருத்தி எழுதிய தீர்ப்புகள்’ வெளியிடப்பட்டது.1978: பாரதிராஜா அவர்களின் ‘நிழல்கள்’ திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார்.1986ல் ‘கலைமாமணி விருது’ வழங்கப்பட்டது.2003 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்மஸ்ரீ விருது’ வழங்கப்பட்டது.

Sunday, February 19, 2017

A Poem For You

நான் இன்னும்
பாலைவனம்
பார்த்ததே இல்லை
என்கிறாய்

நீ பார்க்காமல்
இருப்பதால்தான்
அது பாலைவனமாகவே
இருக்கிறது!

----------------------R.Abishek

Kannamma Song

Support Namma Pasanga

இளம் இசையமைப்பாளரான யஜீவன்
இசையமைத்து அவரே பாடியுள்ள “என்
கண்ணம்மா” பாடலில்
பாடலாசிரியரான எஸ்.ஜீ.பிரபு
சொல்லிசைக்கலைஞனாக
அறிமுகமாகியுள்ளார்.

இப்பாடலின் இசைக்கலவையினைபிரேம் ராஜ்
செய்துள்ளதோடு, பாடலின் ஒளிப்பதிவினை
பிரவீன் செய்துள்ளார்.

கஜன் கே
கலையமுதன் பாடலினை இயக்கியதோடு
பாடலின் தொகுப்பாக்கம்
பணியினையும் செய்துள்ளார்.

காதலர் தினம் வெளியான
இப்பாடல் கொஞ்சம் கோபம் நிறைய
காதல் என்பதை மையப்பொருளாக
கொண்டு
வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடலில்
டிலானி மற்றும் யஜீவன்நடித்துள்ளனர்.

மேலும் இப்பாடல் ஒரு காணொளி
பாடலாக இந்தியாவின் பிரபலமான
DIVO யூடியுப் அலைவரிசையில்
வெளியிப்பட்டுள்ளது.

https://www.youtube.com/watch?v=0q_sxwOnA44

#Support_Namma_Pasanga

Saturday, February 18, 2017

History Of Thirukural

திருக்குறள்

இயற்றியவர்: திருவள்ளுவர்

திருக்குறள் (Thirukkural)  உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.

வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை. கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும் அழைக்கப்படுகிறது

திருக்குறள் - இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் சிலவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழுங்கள்.

தமிழ் உரை எழுதியவர்கள்
• திரு பரிமேலழகர்
• திரு மு.வரதராசனார்
• திரு மணக்குடவர்
• திரு மு.கருணாநிதி
• திரு சாலமன் பாப்பையா
• திரு வீ.முனிசாமி

ஆங்கில உரை எழுதியவர்கள்
• Rev. Dr. G. U. Pope
• Rev W. H. Drew
• Rev. John Lazarus
• Mr F. W. Ellis

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"